search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழுப்புரம் விபத்து"

    • 30-ம் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.
    • கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது.

    விழுப்புரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கீரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது 60). இவரது தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் இறந்தார். நேற்று அவருக்கு 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி (52) மகன்அழகுவேல் ராஜா, மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி (22) ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.

    இந்த கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது.

    இந்த விபத்தில் ராஜேந்திரன், மனைவி சாந்தி மற்றும் அழகு ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சகுந்தலா தேவி, பலத்த காயம் அடைந்தார்.

    தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த சகுந்தலா தேவியை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குபதிந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம்வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் என்பவரை கைது செய்தனர்.

    • வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
    • இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. பிரபல வக்கீலான இவர் வக்கீல்கள் சங்க தலைவராக உள்ளார். இவரது மகன் பிரகதீஷ்வர் (வயது 30). வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இவர் தனது சொந்த ஊரான வி.சாத்தனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    வி.சாத்தனூர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரகதீஷ்வர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பிரகதீஸ்வரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×